search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோஷ பரிகாரம்"

    • பரிகார வழிபாட்டு தலங்களுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்து பயன் பெறலாம்.
    • 75 சதவீதம் ஜாதகத்தில் குரு, சனி ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தம் பெற்று இருக்கும்.

    ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் குருவும், சனியும் இணைந்தாலோ, இந்த இரு கிரகங்களுக்கும், சாரப்பரிவர்த்தனை பெற்றாலோ, சமசப்தம பார்வை பெற்றாலோ பிரம்மஹத்தி தோஷம் உள்ளது என்று கூறலாம். 75 சதவீதம் ஜாதகத்தில் குரு, சனி ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தம் பெற்று இருக்கும். இந்த கிரக இணைவு ஜாதகருக்கு யோகமா, சாபமா என்பதை சுய ஜாதகத்தில் 1,5,9 பாவகங்கள் பெற்ற வலிமை, குரு, சனிக்கு அஷ்டம, பாதக ஸ்தானங்களுடன் உள்ள சம்பந்தம், ராகு, கேதுவுடன் உள்ள சம்பந்தத்தை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

    மேலும் இந்த தோஷம் தசா புத்தி அந்தர நாதர்களுடனும், கோட்சாரத்துடனும் சம்பந்தம் பெறும் போதே வினைப்பயனை முழுவதும் அனுபவிக்கச் செய்கிறது. ஜோதிட உலகமே தோஷம் என்று கூறும் இந்த குரு, சனி சம்பந்தம் ஒரு சிலருக்கு பெரிய திருப்பு முனையை தந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்த கிரக சம்பந்தம் கூரை வீட்டில் வாழ்ந்தவரை கூட குபேரனாக மாற்றியுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய பல்வேறு பரிகார தலங்களுக்கு சென்றும் பிரச்சனை தீரவில்லை என்று கூறுபவர்கள் தோஷத்தின் வலிமையை முடிவு செய்த பிறகு எந்த முறையில் தோஷத்தை சரி செய்வது என்பதை தீர்மானிக்க வேண்டும். முதலில் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் கோட்சாரத்தில் பாக்கியஸ்தானம் வலுப்பெறும் காலத்தில் வழிபாடு, பரிகாரம் செய்தால் உடனே பலன் கிடைக்கும்.

    குரு, சனிக்கு செவ்வாய் சம்பந்தம் இருப்பவர்கள் நீண்ட நாள் வழிபாடும் பெரிய அளவில் செலவில்லாத முறையான அமாவாசை, சிவ வழிபாடு, வயதான ஏழை தம்பதிகளுக்கு உணவு , உடை கொடுத்து ஆசி பெறுதல் போன்ற எளிய பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள்.

    குரு, சனிக்கு ராகு, கேது சம்பந்தம் அல்லது அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சம்பந்தம் இருப்பவர்கள் ராமர் வணங்கிய தேவிபட்டிணம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர், கொடுமுடி, ஸ்ரீ வாஞ்சியம், திருபுல்லாணி போன்ற பரிகார வழிபாட்டு தலங்களுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்து பயன் பெறலாம்.

    • சிலருக்கு பல்வேறு காரணங்களால் திருமணம் தாமதமாகிறது.
    • தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.

    திருமண விஷயத்தில் ஒருவரின் சுய ஜாதக கிரக அமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு.சில வகையான தோஷங்கள், சில கிரக சேர்க்கைகள், சில தசா, புத்திகள், கோட்ச்சார நிலை போன்ற பல்வேறு காரணங்களால் திருமணம் தாமதமாகிறது. இது போன்ற காரணங்களால் திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? என்பது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது. திருமணத் தடை செய்யும் தோஷங்களையும் அதற்கான பரிகாரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.

    செவ்வாய் தோஷம்

    ஜாதக தோஷங்களில் மிக பிரபலமாக அனைவருக்கும் தெரிந்த தோஷம் "செவ்வாய் தோஷம்'' ஜாதக கட்டத்தில் லக்னம், ராசி மற்றும் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். இதில் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்ப்பது நடைமுறையில் சரிவர வில்லை . சுக்கிரனும் செவ்வாயும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் கிரகம் என்பதால் தோஷம் ஏற்பட வாய்ப்பில்லை. பாவக ரீதியாக செவ்வாய் நின்ற இடத்திற்கு ஏற்ப தோஷத்தினால் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பல்வேறு விதி விலக்குகளால் சிலருக்கு தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும் கூட 2,7,8-ம்மிடத்தில் உள்ள செவ்வாய்க்கு 2,7,8-ல் செவ்வாய் உள்ள ஜாதகத்தையும் 4,12-ம் இடத்தில் உள்ள செவ்வாய்க்கு 4,12ல் செவ்வாய் உள்ள தோஷத்தையும் சேர்க்க வேண்டும். பொதுவாக செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் செவ்வாய் கிழமை ராகு வேளையில் சுப்ரமணியரை சிவப்பு அரளி சாற்றி வழிபட்டால் திருமணம் நல்ல முறையில் நடக்கும்.

    ராகு - கேது தோஷம்

    செவ்வாய் தோஷத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்தது சர்ப்ப தோஷம். நிழல் கிரகம், சர்ப்பங்கள் எனப்படும் ராகு கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தால் திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது. 1,7-2,8 மிட சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். எனவே இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். 5-ல் சர்ப்ப கிரகம் உள்ள ஜாதகத்திற்கு 5, 11-ல் சர்ப்பங்கள் இல்லாத ஜாதகத்தை இணைப்பது சிறப்பு. சர்ப்ப தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    கால சர்ப்ப தோஷம்

    லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் ராகு-கேதுவின் பிடியில் அடைபட்ட நிலையில் இருப்பது காலசர்ப்ப தோஷம்.இத்தகைய அமைப்பை பெற்ற ஜாதகருக்கு 33 வயது வரை வாழ்க்கை போராட்ட களமாக இருக்கும். திருமணம், குழந்தை, தொழில் என எல்லா பாக்கியமும் காலம் தாழ்த்தியே ஏற்படும். காலதாமதமாக திருமணம் செய்வதே நல்ல தீர்வு. தசாபுத்திகள் சாதகமாக இருந்தால் திருமணம் தடைபடாது. பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். திருமணம் தடைபடுபவர்கள் நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா கோவில் சென்று வருவது சிறப்பு.

    கிரகண தோஷம்

    பூமியில் கிரகணம் சம்பவிக்கும் நாளுக்கு முன், பின் 7 நாட்கள் பிறக்கும் குழந்தைகளின் வினைப் பதிவு மிகவும் கடுமையாக உள்ளது. ராகு-கேது, சூரியன்-சந்திரனுடன் செவ்வாய், சனி சம்பந்தம் பெறுபவர்கள் அசுப பலனையும், குரு மற்றும் லக்ன சுபரின் சாரம் பெற்றவர்கள் எதையும் வென்று வெற்றி வாகை சூடுபவர்களாக இருக்கிறார்கள். லக்னம் 7-ம் இடம் சுப வலிமை பெற்று தசா புத்திகள் சாதகமாக இருந்தால் திருமணம் தடைபடாது. 1,7-2,8-ம் இடத்திற்கு கிரகண தோஷ பாதிப்பு இருந்து திருமணம் தடைபட்டால் ராம நாமம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது எழுத வேண்டும்.

    சனி தோஷம்

    கர்மகாரகன் மற்றும் ஆயுட்காரகனாகிய சனி பகவான் மண வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் தரக்கூடிய 1, 2, 5, 7, 8 மற்றும் 12-ல் அமர்ந்தால் திருமணம் காலதா மதமாக நடைபெறும். இத்துடன் அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், ராகு-கேது இணைந்தால் தோஷம் இரட்டிப்பாகும். சனிக்கு திரிகோணாபதிகள் மற்றும் குரு தொடர்பு இருப்பின் தோஷம் குறையும்.1, 2, 7, 8, 12-ல் உள்ள சனிக்கு இதே அமைப்புள்ள ஜாத கத்தையும், 5-ல் உள்ள சனிக்கு 5-ல் சனியில்லாத ஜாதகத்தையும் இணைத்தல் சிறப்பு. மேலும் தொடர்ந்து சிவ வழிபாடு செய்து வந்தால் திருமணத் தடை அகன்று மங்கலம் உண்டாகும்.

    சூரிய தோஷம்

    ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். 2-ல் அமர்ந்த சூரியன், குடும்பம் அமைவதை காலதாமதப் படுத்துகிறது 7-ல் அமர்ந்த சூரியன் களத்தரத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது. 8-ல் அமர்ந்த சூரியன் திருமணத் தடையை ஏற்படுத்தும். மகர, கும்ப லக்னத்தாருக்கு 7, 8-ல் அமர்ந்த சூரியன் விதிவிலக்கு பெறும். ஞாயிற்று கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சூரிய ஓரையில் 1 கிலோ கோதுமை தானம் தருவதுடன் 6 வாரம் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    சுக்கிர தோஷம்

    களத்திரகாரகரான சுக்ரன் 7-ல் அமர்வது காரகோ பாவக நாஸ்த்தி. சிலருக்கு திருமணத்தை தாமதப்படுத்துகிறது. இந்த தோஷம் பெண்களை விட ஆண்களை மிகவும் பாதிக்கிறது. வெள்ளிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    களத்திர தோஷம்

    ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவ களங்களான 1,27,8 ஆகிய பாவகங்களில் இயற்கை பாவ கிரகங்கள் அமர்வது அல்லது 7-ம் பாவகாதிபதி நீசம் அஸ்தமனம் அடைவது போன்றவை களத்திர தோஷத்தை ஏற்படுத்தும். இந்த தோஷம் அமையப் பெற்ற ஜாதகருக்கு திருப்தியற்ற மணவாழ்க்கை , காலதாமத திருமணம் , களத்தரத்தின் மூலம் பெருமளவு ஆதாயமின்மை, தம்பதியரிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும். இவர்கள் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மண வரை சுக்ர ஓரையில் அர்த்தநாதீஸ்வரரை வழிபட வேண்டும்.

    புத்திர தோஷம்

    ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஆண் ஜாதகமாயின் லக்னத்திற்கு 5ம் இடத்தை கொண்டும் பெண் ஜாதகமாயின் லக்னத்திற்கு 5, 9-ம் இடத்தை கொண்டும் குருவின் வலிமையை கொண்டும் புத்திர பாக்கியத்தை தீர்மானிக்கலாம். 5-ம் அதிபதி அல்லது 5-ம்மிடஅதிபதி நீசம், வக்ரம், அஸ்தங்கம், பகை வீட்டில் தஞ்சம் 6, 8.12 ல் மறைவு, 5-ல் நின்ற குரு ஆகியவை புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். புத்திர தோஷம் உள்ள ஜாதகத்திற்கு புத்திர தோஷமற்ற ஜாதகத்தை இணைப்பதே. 5-ம்மிட வலிமை குறைவால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் பஞ்சமி திதியில் மீனாட்சி அம்மனை வழிபட வேண்டும்.

    புனர் பூ தோஷம்

    சனி, சந்திரன் சம்பந்தத்தால் உருவாகும் கடுமையான கருணையற்ற தோஷம். தாலி கட்டும் நேரத்தில் கூட திருமணத்தை நிறுத்தும் வல்லமை படைத்த தோஷம். திங்கள் தோறும் அம்பிகை வழிபாடு மற்றும் பச்சரிசி தானம் செய்ய வேண்டும்.

    மாங்கல்ய தோஷம்

    இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். 8-ம் பாவகம் மாங்கல்ய ஸ்தானமாகும். இதுவே ஆயுஸ் ஸ்தானம் அதாவது லக்னத்துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இது திருமணத் தடையை மிகைப்படுத்தும் தோஷ அமைப்பாகும். 8-ம் இடத்தில் நீச, அஸ்தங்கம் பெற்ற கிரகம் அமர்வது மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்கும். இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தாலும் 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி. வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சுக்கிர ஓரையில் வயதான சுமங்கலிப் பெண்களிடம் மங்கலப் பொருட்கள் தந்து ஆசி பெற வேண்டும்.

    கிரக இணைவுகள் தரும் தோஷம்

    சிறப்பான மணவாழ்வை தடை செய்வதில் கிரக இணைவுகள் பெரும் பங்கு வகிக்கிறது. சில குறிப்பிட்ட கிரக இணைவுகள் மண வாழ்வையே முறிக்கும் வல்லமை படைத்தவைகள். 6,7,8 ஆகிய பாவக அதி பதிகள் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் பெறுவது. சூரியனுடன் சுக்கிரன், செவ்வாய் இணைவு சந்திரன்-கேது, சுக்கிரன்-கேது, செவ்வாய்-கேது இணைவு பெறுதல். இதே போன்ற கிரக இணைவு பெற்று திருமணம் தடைபடுபவர்கள் அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.

    திதி சூன்ய பாதிப்பு

    அமாவாசை, பவுர்ணமி தவிர்த்து ஏனைய திதிகளில் பிறந்தவர்களுக்கு சூரிய ஒளிக்கதிர் ஜனன ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களுக்கு கிடைக்காமல் இருந்தால் திதி சூன்ய பாதிப்பு ஏற்படுகிறது. திதி சூன்ய பாதிப்பு இருப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் தோஷம் விலகும்.

    பிரம்மஹத்தி தோஷம்

    ஜனன ஜாதகத்தில் குருவும், சனியும் அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்று பிரம்மஹத்தி தோஷத்தை உருவாக்கும். இதனால் வறுமை, நிம்மதியற்ற வாழ்க்கை , திருமணத் தடை , குழந்தை பேரின்மை போன்ற பல்வேறு பிரச்சினை உருவாகும்.

    விஷ கன்னிகா தோஷம்

    ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7,8 ஆகிய பாவகங்கள் முழுவதும் கெட்டு பாவக அதிபதிகளும் , சுக்கிரனும் வலிமையற்று இருந்தால் அந்த ஜாதகம் விஷ கன்னிகா தோஷமுடையதாகும். இந்த தோஷமுடைய ஜாதகருக்கு திருமணம் நடைபெறாது. திருமணம் நடந்தாலும் வெகு நாட்களுக்கு நிலைக்காது. இத்தகைய தோஷம் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. இவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பதே சிறப்பு. 2-வது திருமணமோ வாழ்க்கை இழந்த நபரை திருமணம் செய்யும் போதோ தோஷத்தின் வீரியம் குறையும். எப்படிப்பட்ட திருமண தோஷமாக இருந்தாலும் எந்த விளைவாக இருந்தாலும் தசாபுத்தி கோட்ச்சார கிரகங்கள் தொடர் பெறும் காலங்களில் மட்டுமே சுப-அசுப விளைவுகள் ஏற்படும். ராகு-கேது, செவ்வாய் மட்டுமே திருமணத்தை தடை செய்யும் என்ற பொதுவான மூட நம்பிக்கையை கை கழுவி தடைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய பரிகாரம் செய்து பயன்பெற வாழ்த்துக்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்திராணி தாயார் சிறப்புமிக்கவள்.
    • காயத்ரி மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்ய வேண்டும்.

    கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றது. அந்த பிரச்சனைகளில் நாம் முதல் காரணமாக எடுத்துக் கொண்டாள் இருவருக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடாக தான் இருக்கும். ஆனால் இரண்டாவது காரணமாக இருந்தாலும் திருமண வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக விளங்கும் தாம்பத்திய வாழ்க்கையில் சரி இல்லாத போது தான். கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஒருவர் மீது ஒருவர் கோபம் எரிச்சல் போன்ற மனநிலை உண்டாகும். இது திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையில் இருக்கும் தாம்பத்திய வாழ்க்கை மேலும் பாதிக்கும். அதனால் இந்த

    ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

    வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

    தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்

    காயத்ரி மந்திரத்தை உச்சரித்து இந்திராணி தாயாரை மனதார வேண்டி பூஜை செய்து வந்தால் திருமணம் தடைப்பட்டு வந்து கொண்டிருக்கும் நபர்களுக்கு கூட விரைவில் திருமணம் நடக்கும். ஏன் கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையின்மையால் தினசரி வீட்டில் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் ஒற்றுமை உண்டாகும்.

    இந்திராணி தாயாரை பூஜை செய்து வந்தால் தன்னை வேண்டி பூஜை வழிபாடுகள் செய்பவர்களின் உயிரை காப்பதிலும் மற்றும் முக்கியமாக அவர்களுக்கு ஏற்ற நல்ல வாழ்க்கை துணையே அமைத்துத் தந்து அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை முதல் குடும்ப வாழ்க்கை வரை அனைத்தும் சீரும் சிறப்புமாக தரக்கூடியதில் இந்த இந்திராணி தாயார் சிறப்புமிக்கவள். இப்படி இந்திராணி தாயாரை பூஜை செய்து வந்தாள் திருமணம் ஆகாத பெண்களுக்கு குணத்தில் நல்ல ஆண்மகனும், திருமண ஆகாத ஆண்களுக்கும் குணத்தில் நல்ல பெண்களும் இடையில் திருமணம் வெகு சீக்கிரமாக நடக்கும்.

    • இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும் இவர் திருமேனியில் அடக்கம்.
    • மேஷ ராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

    இந்தியாவில் 2 கால பைரவர் கோவில்கள் உள்ளன. முதல் கோவில் காசியில் உள்ள தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) என்றழைக்கப்படும் கோவில். அதற்கு அடுத்தது தருமபுரி கால பைரவர் கோவில். தருமபுரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அதியமான்கோட்டையில் இக்கோவில் அமைந்துள்ளது. தருமபுரியில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வசதி உள்ளது. பேருந்தில் இருந்து இறங்கிய உடன் அருகிலேயே கோவில் உள்ளது.

    இந்த கோவிலை கட்டிய பிறகு அதியமான் மன்னர் போர்களில் வென்றார் என்கிறது வரலாறு. இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன.

    இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார். அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும். அன்று முதல் அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விளங்கினார். அன்று முதல் கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும். இக்கோவிலில் உன்மந்திர பைரவர் உள்ளார் (முதன்மை பைரவர்). இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.

    மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபடுவார்.

    இவர் போருக்கு செல்லும் முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சாம்பபூசனை விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

    • தொடரும் கடன் பிரச்சினைக்கு முன்னோர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும்.
    • பாதிப்பு என்பது ஏதாவது ஒரு கால கட்டத்தில் வெளிப்பட்டே தீரும்.

    பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் வீடு, வாகன யோகம் போன்ற சுப பலன்கள் எளிதில் நடக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. தொடரும் கடன் பிரச்சினைக்கு முன்னோர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் இந்த தோஷம் ஏற்படும் என்பது தவறான கருத்து. ஒரு தாய், தந்தைக்கு பிறந்த 4 ஆண்கள் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டும் பித்ரு தோஷ தாக்கம் அதிகமாக இருக்கும். முன்னோர்களின் மரபணு சம்பந்தம் ஒருவரின் உடலில் எந்த அளவு இருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போல் பித்ரு தோஷ தாக்கத்தின் வலிமையில் மாற்றம் ஏற்படும்.

    ஆனால் பாதிப்பு என்பது ஏதாவது ஒரு கால கட்டத்தில் வெளிப்பட்டே தீரும். நம் அண்ணன் கஷ்டப்படுகிறான், தம்பி கஷ்டப்படுகிறான். நாம் நிறைய புண்ணியம் பண்ணி இருக்கிறோம். அதனால் நன்றாக இருக்கிறோம் என்று யாரும் நினைத்து விட முடியாது. அந்த பிறவிக்குள் ஏதாவது ஒரு கால கட்டத்திற்குள் நிச்சயம் பாதிப்பு உண்டு. அவர் பாதிக்கப்படவில்லை என்றால் அவரின் வாரிசுகள் பல மடங்காக பாதிக்கப்படுகிறார்கள்.

    வசதிகள் கொட்டி கிடக்கும். ஆனால் அதை அனுபவிக்க பாக்கியமற்ற வாரிசுகள் உருவாகும். கொடுத்து கெடுக்கும் யோகம். இதுவும் ஒரு வகையான பித்ரு தோஷம். நமக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது என்று யாரும் வருந்த வேண்டாம். ஒரே தாயின் வயிற்றில் உருவாகிய வாரிசுகளுக்கு பாதிப்பு ஏற்படும். காலம் மட்டும் மாறுபடும்.

    ஒரு மனிதன் தந்தை வழி மூதாதையர் 6 பேர்,தாய் வழி மூதாதையர் 6 பேர் என மொத்தம் 12 பேருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    முறையான பித்ரு பூஜை ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் நிச்சயம் அகற்றி விடும். ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை பரிகாரங்களை செய்பவர்கள், தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் தொடர் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். எனவே, மகாளய பட்சம் அன்று பித்ரு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தால் புண்ணிய பலன் தலைமுறைக்கு வந்து சேரும்.

    • 5 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினால் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
    • 6 ஏழை கலைஞர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் கலைத்துறையில் சாதனை படைக்கலாம்..

    திங்கட்கிழமை சங்கடஹர சதுர்த்தி உள்ள நாளில் அதியமான் கோட்டை தட்சிண காசி கால பைரவருக்கு நந்தியா வட்டை மலர் மாலை அணிவித்து புனுகு பூசி ஜவ்வரிசி பாயாசம், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் தாயாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் போகும்.

    சகோதர ஒற்றுமை ஏற்பட:

    செவ்வாய் கிழமை நாளில் ராகு காலத்தில் அதியமான் கோட்டை தட்சிண காசி கால பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து புனுகு பூசி துவரம்பருப்பு பொடி கலந்த அன்னம், செம்மாதுளம் படையலிட்டு அர்ச்சனை செய்து வர சகோதர ஒற்றுமை ஏற்படும்.

    எதிர்ப்புகள் அகலவும், வெற்றிகள் குவியவும்:

    செவ்வாய் கிழமை நாளில் அதியமான் கோட்டை தட்சிண காசி காலபைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சை பழம் மாலை அணிவித்து புனுகு பூசி எலுமிச்சை பழத்தில் நெய் தீபமிட்டு வேகவைத்த செங்கிழங்கு கலந்த பாயாசம், மாதுளம் பழம், ஜிலேபி அர்ச்சனை செய்துவர எதிர்ப்புகள் அகன்று வெற்றிகள் குவியும்.

    கல்வியில் சிறந்து விளங்க:

    புதன்கிழமை நாளில் அதியமான் கோட்டை தட்சிண காசி கால பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி பாசி பருப்பு பொடி கலந்த அன்னம், பாசி பருப்பு பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்பட்ட தடை அகலும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

    வியாபாரத்தில் வெற்றி வாகை சூட, புதிய தொழில் தொடங்க:

    புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் அதியமான்கோட்டை கால பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து மரிக்கொழுந்து காசி சூட்டி புனுகு பூசி பாசிப்பயறு சுண்டல், பாசிப்பயறு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் வியாபாரத்தில் வெற்றி வாகை சூடலாம்.

    தனப்ராப்தி ஏற்பட:

    தேய்பிறை அஷ்டமி நாளில் அல்லது வியாழக்கிழமை அதியமான்கோட்டை தட்சிண காசி காலபைரவருக்கு சந்தன காப்பு செய்து மஞ்சள் நிற சம்பங்கி மாலை சூடி புனுகு பூசி சுண்டல் படையலிட்டு பால் பாயாசம், நெல்லிக்கனி, ஆரஞ்சுப்பழம், வறுத்த கடலைப்பருப்பு பொடி கலந்த அன்னம் படையலிட்டு செய்துவர தனப்ராப்தி ஏற்படும்.

    குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட:

    வியாழக்கிழமை நாளில் காலை 7:30 மணிக்குள் அதியமான்கோட்டை தட்சிண காசி காலபைரவருக்கு சந்தனக்காப்பு செய்து முழு முந்திரி வித்து எனப்படும் முந்திரி கர்ப்பப்பை போல அமைந்து உள்ளே குழந்தையை உள்ளடக்கி யது போல காணப்படும். அந்த முந்திரி பருப்புடன் கூடிய முந்திரிக்கொட்டையில் மாலை அணிவித்தால் தான் முழு பலன் கிட்டும். புனுகு பூசி முந்திரி பருப்பு, கொண்டைக்கடலை சுண்டல், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து 5 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினால் குழந்தை பாக்கியம் ஏற்படும்.

    கலைத்துறையில் சாதனை படைக்க:

    வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் அதியமான் கோட்டை தட்சிண காசி காலபைரவருக்கு சந்தனக்காப்பு செய்து புனுகு பூசி ரோஜா மாலை சூட்டி வெள்ளி ஆபரணங்கள் அணிவித்து சர்க்கரைபொங்கல், சேமியாபாயாசம், மாம்பழம் படைத்து அர்ச்சனை செய்து 6 ஏழை கலைஞர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் கலைத்துறையில் சாதனை படைக்கலாம்..

    நாகதோஷம் நீங்க:

    வெள்ளிக்கிழமை நாளில் ராகு காலத்தில் தட்சிண காசி காலபைரவருக்கு பாலாபிஷேகம் செய்து புனுகு பூசி நாகலிங்க பூமாலை அணிவித்து பால் சாதம், பால்பாயாசம் நெய்வேத்தியமாக படைத்து அர்ச்சனை செய்து வந்தால் நாக தோஷம் நீங்கும். அருகே உள்ள பாம்பு புற்றில் ஒரு முட்டையை மேல் பகுதியில் லேசாக உடைத்து வைக்கவேண்டும்.

    விஷபயம் நீங்க:

    காசி கால பைரவருக்கு சந்தன காப்பு செய்து மஞ்சள் நிற சம்பங்கி மாலை சூடி புனுகு பூசி சுண்டல் படையலிட்டு பால் பாயாசம், நெல்லிக்கனி, ஆரஞ்சுப்பழம், வறுத்த கடலைப்பருப்பு பொடி கலந்த அன்னம்

    சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சிண காசி காலபைரவருக்கு நாகலிங்கப் பூ மாலை அணிவித்து புனுகு பூசி எள் கலந்த சாதம், பால்பாயாசம், கருநிற திராட்சை நெய்வேத்தியமாக படைத்து அர்ச்சனை செய்தால் விஷ பயம் நீங்கும்.

    மேலும் பூஜைகள் பற்றிய விபரங்களை அறிய: கிருபாகரன் குருக்கள்: செல்-9443272066

    • முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும்.
    • முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோயில் உள்ளது.

    செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும். பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.

    மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது. இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.

    கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

    • சிலர் பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய பல்வேறு பரிகார தலங்களுக்கு சென்றும் பிரச்சனை தீரவில்லை என்று கூறுபவர்கள்
    • கோட்சாரத்தில் பாக்கியஸ்தானம் வலுப்பெறும் காலத்தில் வழிபாடு, பரிகாரம் செய்தால் உடனே பலன் கிடைக்கும்.

    ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் குருவும், சனியும் இணைந்தாலோ, இந்த இரு கிரகங்களுக்கும், சாரப்பரிவர்த்தனை பெற்றாலோ, சமசப்தம பார்வை பெற்றாலோ பிரம்மஹத்தி தோஷம் உள்ளது என்று கூறலாம். 75சதவீதம் ஜாதகத்தில் குரு, சனி ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தம் பெற்று இருக்கும். இந்த கிரக இணைவு ஜாதகருக்கு யோகமா, சாபமா என்பதை சுய ஜாதகத்தில் 1,5,9 பாவகங்கள் பெற்ற வலிமை, குரு, சனிக்கு அஷ்டம, பாதக ஸ்தானங்களுடன் உள்ள சம்பந்தம், ராகு, கேதுவுடன் உள்ள சம்பந்தத்தை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

    மேலும் இந்த தோஷம் தசா புத்தி அந்தர நாதர்களுடனும், கோட்சாரத்துடனும் சம்பந்தம் பெறும் போதே வினைப்பயனை முழுவதும் அனுபவிக்கச் செய்கிறது. ஜோதிட உலகமே தோஷம் என்று கூறும் இந்த குரு, சனி சம்பந்தம் ஒரு சிலருக்கு பெரிய திருப்பு முனையை தந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    இந்த கிரக சம்பந்தம் கூரை வீட்டில் வாழ்ந்தவரை கூட குபேரனாக மாற்றியுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய பல்வேறு பரிகார தலங்களுக்கு சென்றும் பிரச்சனை தீரவில்லை என்று கூறுபவர்கள் தோஷத்தின் வலிமையை முடிவு செய்த பிறகு எந்த முறையில் தோஷத்தை சரி செய்வது என்பதை தீர்மானிக்க வேண்டும். முதலில் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் கோட்சாரத்தில் பாக்கியஸ்தானம் வலுப்பெறும் காலத்தில் வழிபாடு, பரிகாரம் செய்தால் உடனே பலன் கிடைக்கும்.

    குரு, சனிக்கு செவ்வாய் சம்பந்தம் இருப்பவர்கள் நீண்ட நாள் வழிபாடும் பெரிய அளவில் செலவில்லாத முறையான அமாவாசை, சிவ வழிபாடு, வயதான ஏழை தம்பதிகளுக்கு உணவு , உடை கொடுத்து ஆசி பெறுதல் போன்ற எளிய பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள். குரு, சனிக்கு ராகு, கேது சம்பந்தம் அல்லது அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சம்பந்தம் இருப்பவர்கள் ராமர் வணங்கிய தேவிபட்டிணம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர், கொடுமுடி, ஸ்ரீ வாஞ்சியம், திருபுல்லாணி போன்ற பரிகார வழிபாட்டு தலங்களுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்து பயன் பெறாலம்.

    • விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
    • செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக விளங்குபவர் முருகப்பெருமான்.

    செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக விளங்குபவர் முருகப்பெருமான். ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் 'செவ்வாய் தோஷம்' என்று கருதப்படும்.

    அவர்களுக்குத் திருமணத்தடை, புத்திரப் பேற்றில் தடை, குடும்ப ஒற்றுமை குறைவு, தொழிலில் இழப்பு, உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடி போன்றவை ஏற்படலாம்.

    அப்படிப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

    பழனி மற்றும் வைத்தீஸ்வரன் கோவில், செவ்வாய்க்குரிய பரிகாரத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

    • இந்த தோஷம் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் பாதங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
    • தோஷம் உள்ளவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.

    மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான வாழ்க்கை அமைகிறது. ஒரு சிலருக்கு வெற்றி வாய்ப்பு வீடு தேடிவந்து அழைக்கிறது. ஒரு சிலருக்கு வாய்ப்பை தேடிப் போனாலும் கிடைப்பது இல்லை. என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். 'பிரம்மஹத்தி தோஷம்' என்பது, நெஞ்சை பதை பதைக்க வைக்கும் கொடுமையான பஞ்ச மகா பாதங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    பூமியில் ஒரு உயிர் ஜனனமாக காரணமாக இருக்கும் பிரபஞ்ச சக்திக்கே அந்த உயிரை எடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. சக மனிதர்கள் ஒரு உயிருக்கு தீங்கு விளைவித்தால், பாதிப்பை ஏற்படுத்தினால், உருவாகும் தோசமே பிரம்மஹத்தி தோசமாகும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்வது அல்லது அதற்கு சமமான பாவங்கள் செய்தவருக்கே இந்த தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் யாருக்கெல்லாம் வரும் என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போம்.

    1. கருச்சிதைவு செய்தவருக்கும் அதற்கு உதவிய மருத்துவருக்கும் வரும். அவர்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். அப்படி குழந்தை பிறந்தாலும் வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தையால் காலம் முழுவதும் நிம்மதியின்மை ஏற்படும்.

    2.பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்கு கொடுத்து, ஏமாற்றி திருமணம் செய்யாமல் இருப்பவருக்கு திருமணமே நடக்காத நிலை, அப்படி நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை நரக வேதனை தருவதாக இருக்கும்

    3.பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்குரிய ஊதியம் தராமல் இருப்பது. உழைத்த வேர்வை காயும் முன்பு கூலி கொடுக்காதவர்களுக்கு வரும். இந்த தோஷத்தால் தொழில் சரிவர அமையாமை, தொழில் நட்டம், வேலை இல்லா நிலை ஏற்படும்.

    4.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுபவர்களுக்கு, எந்த முகாந்திரமும் இல்லாமல் பிராமணர்களை துன்புறுத்தினால், வருத்தம் ஏற்படுத்தினால், அவர்களுக்கு அல்லது அவர்களது குழந்தைகளுக்கு கற்ற கல்வியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். குல தெய்வ சாபத்தை விட குரு சாபம், பிராமண சாபம் மிக கொடியது. பிராமண குலத்தில் பிறந்த ராவணனனை ராமர் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பை அடிப்பவர்களுக்கு பண இழப்பு ஏற்படும். வேற்று மதத்தினர் அல்லது அந்நிய பாஷை பேசுபவர்களால் தொல்லை ஏற்படும். இவர்களுடைய குழந்தைகள் கலப்பு திருமணம் செய்து கொண்டு வாழ்வை தொலைத்து விடுகிறார்கள்.

    6. ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல், குல தெய்வ சொத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு, பங்காளி தகராறில் குல தெய்வ கோவிலை மூடியவர்களுக்கு கடவுள் அனுக்கிரகம் இருக்காது.

    7. கட்டிய மனைவிக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரத் தவறியவரால் தன் அடிப்படை தேவையை கூட நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும் பெற்றோருக்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பவருக்கு, கறவை நின்ற பசுவைக் கசாப்புக்கு அனுப்புபவருக்கு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவருக்கும், நன்றி மறந்தவர்களுக்கும் இந்த தோஷம் ஏற்படுகிறது. அதனால் வருடக் கணக்கில் மனக்குழப்பம், தவறே செய்யாமல் தண்டணை அனுபவிப்பது, மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய், வறுமை, அங்கீகாரம் இன்மை, குடும்பத்தில் மரியாதை இன்மை, நடத்தி வரும் தொழிலுக்கு வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவை பல ஆண்டுகள் நீடிக்கும். சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிக் கொண்டு இருப்பார்கள். ஒருவரின் உயிரை எடுத்தால் மனம் என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோசம் இருப்பவர்களின் மனமும் இருக்கும். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • கிருஷ்ணகிரி சூரன்கொட்டாய் கிராமத்தில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது.
    • பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரக்கூடிய தெய்வமாக ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் உள்ளார்.

    தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களிலேயே பிரசித்திப் பெற்ற ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு கோவில் அமைந்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சூரன்கொட்டாய் கிராமத்தில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரக்கூடிய தெய்வமாக ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் உள்ளார்.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஏழுமலையான் சுவாமி சிலைக்கு அடியில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் காகபுஜண்டர், கொங்கனார் ஆகிய 2 சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இதன்பிறகு சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூரன்கொட்டாயில் ஸ்ரீஸ்வர்ணா கர்ஷண பைரவருக்கு கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் அபூர்வ திருவோடு மரம் உள்ளது.

    சிறப்பு மிக்க இந்த கோவிலில் வன்னிமரம் தல விருட்சமாக அமைந்துள்ளது. அதன் அடியில் சர்வசுத்தி புல் உள்ளது. அதை சுற்றி வந்தால் சகல தோஷங்களும் நீங்குகிறது. மேலும் கோவிலில் கொடி மரம் அமைந்துள்ளது. இதற்கு வெண்கலத்தால் கவசம் போடப்பட்டுள்ளது. கோவிலில் மூலவராக உள்ள பழமைவாய்ந்த கால பைரவர் லிங்கமும், ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவரும் கலசத்தை ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    வில்வ மரம், வேப்பங்காடு, அத்திமரம் ஆகிய இயற்கை வளங்களை கொண்ட மரம் , செடிகள் கோவிலில் அமைந்துள்ளன. சகல தோஷங்கள் நீங்க, பக்தர்கள் செல்வ செழிப்புடன் வாழ ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகிறார்.

    • இத்தல முருகனை பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும்.
    • வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் உள்ளது, பழமையான வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணிய சுவாமி ஆலயம். சூரபத்மனால் அமைக்கப்பட்ட கந்தபுஷ்கரணியை தல தீர்த்தமாக கொண்டது, சூரபத்மன் மயிலாக வந்து முருகனை வழிபட்டு ஞானோபதேசம் பெற்ற தலம், ஆறுமுகங்களுடன் அருளும் இறைவனை வழிபடுவதால் ஆறுபடை வீடுகளையும் வழிபட்ட பலனை தரும் ஆலயம், அகத்தியர் வழிபட்ட தலங்களில் ஒன்று, பிரம்பு என்னும் முள்செடியை தல விருட்சமாகக் கொண்ட ஆலயம், ராஜராஜசோழன் பிரதிஷ்டை செய்த இடஞ்சுழி விநாயர் சன்னிதி அமைந்த ஆலயம் என பல்வேறு சிறப்புகளுடன் விளங்குகிறது, இந்த சுப்பிரமணியர் கோவில்.

    இவ்வாலய முருகப்பெருமானை, தொடர்ந்து 6 வாரங்கள் 6 அகல்விளக்கு தீபம் ஏற்றி, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும். முருகப்பெருமானுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறப்பற்ற நிலை உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல முருகனை பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும். இழந்தப் பதவியைப் பெற விரும்புபவர்கள், புதிய பதவி கிடைக்க வேண்டுவோரும், நம்பிக்கையுடன் இத்தல முருகப்பெருமானை வணங்கி வரலாம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், முருகனுக்கு காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், சந்தனத்தால் அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.

    இந்தக் கோவிலில் சிவபெருமான், குபேர திசையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவரை திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் வில்வம் சமர்ப்பித்து வழிபட்டால், கடன் நிவர்த்தி மற்றும் தொழில் அபிவிருத்தி ஏற்படும். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகுந்த சக்தி படைத்தவள். சாந்த துர்க்கையாக இருக்கும் அந்த தேவியை செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், துர்க்காஷ்டமியின் போதும் தீபமேற்றி வழிபடுவோருக்கு, வேண்டும் வரம் அருள்வாள். ஆண்டுதோறும் தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று 501 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதில் பங்கேற்றால் சகல பலன்களும் கிடைப்பதுடன், குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து செல்வம் கொழிக்கும்.

    காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும் இந்த ஆலயம், ஆடுதுறையில் இருந்து பொறையார் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலைகள் சந்திக்கும் மங்கநல்லூரில் இருந்து கிழக்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மங்கநல்லூர், சங்கரன்பந்தல் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் பெரம்பூர் வழியே செல்கின்றது. மயிலாடுதுறை, பொறையார், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதியும் உள்ளது.

    -நெய்வாசல் நெடுஞ்செழியன்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    ×